Sunday, February 18, 2007

அருகில் வராதே!

அருகில் வராதே!

கைகோர்த்து கரை நடந்து
கால் நனைந்தது போதாதென்று
மழை கொண்டு
முழுதாய் நனைந்தது
நிழலாடுது நெஞ்சிலின்றும்!

நாட்களென்னவோ வரிசையாய்
நாட்காட்டியிலிருந்து
குப்பைத் தொட்டிக்கு;

நீயென்னவோ இன்னமும்
கண்ணுக்கு கானலாய்தான்!

காதலில் பிரிவென்னும் துயரன்றி
பெருந்துயர் வேறேது?
தென்றலாய் உடனிருந்தபோது
பற்றிய தீயில்
இன்னும் எரிகிறேன்
தயவுசெய்து அருகில் வராதே!

அன்புடன்,
நம்பி. பா.