Tuesday, November 21, 2006

நீ யாருக்குத் தோழி!

நிலவெரிந்த இரவுகள்
நித்தம் என்
நெருப்புக்குத் துணையாயின.

மனம் நிறைந்த
கணங்களை எண்ணுங்கால்
நான் மறுபடி உடைகிறேன்.

நீயென்ன
நெருப்புக்குத் தோழியா
இல்லையென்
நெஞ்சுக்குத் தோழியா?


அன்புடன்,
நம்பி.பா.




2 comments:

சேதுக்கரசி said...

இவ்வரிகள் அருமை:

//நிலவெரிந்த இரவுகள்
நித்தம் என்
நெருப்புக்குத் துணையாயின//

நம்பி.பா. said...

சேதுக்கரசி,
உங்களுடைய மறுமொழிக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
"நிலவெரியும் இரவுகள்" என்ற சொற்றொடர்
ஆனந்தக்கும்மி படப்பாடலான "ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது"
என்ற பாடலின் தாக்கத்தாலானது.

அன்புடன்,
நம்பி.பா.