Saturday, November 11, 2006

முதல் பதிவு முயற்சி

வைகறை வானம்!

முதற்கண் இணையத்தின்பால்
தமிழை உலவவிட்ட
தமிழார்வலர் அனைவருக்கும்
என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்!
உங்களின் முயற்சி
இன்று தமிழின் வளர்ச்சி!


வைகறை வானத்திற்கு
என் அறிமுகம் பெரிதல்ல!
எனக்கு வைகறை வானம் பெரிது!

கதிருக்கு கட்டியம் கூறி
இருளை வழியனுப்புவது
வைகறை வானம்!

விடியலின் பாதையை
உறுதியாய் கண்ணுக்கு காட்டுவது
வைகறை வானம்!

வானத்தின் வண்ணக்கோலங்களில்
என் எண்ணந்தனை
பெரிதாய் கவர்ந்தது
வைகறை வானம்!

எண்ணத்தின் போக்கிலே
என்னென்ன தோன்றுகிறதோ
எழுதப் போகிறேன் இந்தப் பக்கங்களில்!

அன்புடன்
நம்பி.பா.

4 comments:

go_getter said...

நம்பி,

"வைகறை வானம்" தலைப்பு மிகவும் நன்றாகவும், பொருள் பொதிந்ததாகவும் உள்ளது.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
உமது பயனம் தெளிவாக தொடரட்டும்!
-வஞ்சி

வெற்றி said...

நம்பி,
வாருங்கள். வாழ்த்துக்கள்.
உங்கள் வரவால் தமிழ்மணம் மேலும் பொலிவுறட்டும்.

பி.கு:- உங்களின் தன்முக அறிமுகத்தைப் [profile] பார்த்த போது 2004ல் Blog ஆரம்பித்துளீர்கள் என்றிருக்கிறது. :-)) இணைந்த பின் இவ்வளவு காலம் கழித்து தமிழில் எழுத வந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

தொடருங்கள். உங்களின் படைப்புக்களைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

வடுவூர் குமார் said...

வாங்க நம்பி
தமிழ் வலையுலகத்துக்கு.

நம்பி.பா. said...

நன்றி வெற்றி மற்றும் வடுவூர் குமார்! கடந்த ஒரு ஆண்டாகவே நான் வலை பதிந்து வருகிறேன்.
புதிய இடுகையை அளிக்க வந்ததில் ஏதோ காரணத்தில் தமிழ்மணம் எனது எல்லா இடுகைகளையும் காட்டுகிறது! உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி !