Saturday, November 11, 2006

பாரதி பாரதிதான்!

எத்தனை முறை படித்தாலும்
அதே வீச்சு, அதே கூர்மை!!

எத்தனை முறை,
எத்தனை பேர்,
எத்தனை விதம் சொன்னாலும்
பாரதி பாரதிதான்!

தமிழ் வாழப் பிறந்தவன் பாரதி
தான் வாழாமல் வாழ்ந்தவனை
அன்று கைவிட்டோம்!
இன்றவன் வார்த்தைகள்
நம்மை வாழ வைக்கின்றன!

எல்லோருக்கும் நல்லன
எல்லாம் கிட்டிட எண்ணிய
அவனை என்றும் மறவோம்!

ஒவ்வொரு நாளிலும்
பாரதியை நாம்
நாளின் முதல் மூச்சாய் கொள்வோம்!



பாரதியின் ஒரு சிறு கவிதை!

தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!

No comments: